ஆந்திராவின் புதிய தலைநகரமாக அமராவதி விளங்கும் என்று அதிகரப்பூர்வமாக ஆந்திரா அரசு செய்தி வெளியிட்டுள்ளது. விஜயவாடா மற்றும் குண்டூர்-க்கு இடையில் அமராவதி என்னும் நகரை புதியதாக உருவாக்க ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது.

2௦14 ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் ஆந்திர மற்றும் தெலுங்கான-விற்கு ஹைதராபாத் பொது தலைநகரமாக இருக்கும் என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.

ஆந்திர தலைநகர் பகுதி வளர்ச்சி குழுமம், தலைநகரை உருவாக்க தேவைப்படும் நிலத்தை விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களிடம் இருந்து உரிமம் பெற அரசு வேலைகளை தொடங்கியுள்ளது.

English Summary : Andhra Pradesh Government announced that Amravathi is the new capital of Andhra Pradesh.