‘அனுஷத்தின் அனுகிரஹம்’
(1690 எபிசோடுகளை கடந்தது)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்‘’ என்பது வள்ளுவர் வாக்கு செவிக்கு செல்வம் என்பது கல்வி மட்டும் இன்றி சமகாலங்களில் வாழ்ந்த பெரியவர்களை பற்றியும் அவர்களாள் நடந்த அற்புதங்களை பற்றி கேட்பதும் செவிக்கு பயக்கபடும் அதீத செல்வமே…

கடந்த நூற்றாண்டுகளில் நம்மை அதிகம் வியக்க வைத்த மகான் ஸ்ரீ காஞ்சி பெரியவர்..அவர் வாய்மொழி அனைத்தும் அழிக்க முடியாத செல்வம். அவரை பற்றி அறியாத தகவல் ஆயிரம் உண்டு. அவற்றை கேட்கும் பொழுதே நம் உள்ளம் மலர்வதை உணரலாம்..அத்துனை அதிசயங்கள் நிறைந்த அவரை பற்றி ‘அனுஷத்தின் அனுகிரஹம்’ நிகழ்சசியில் நம் புதுயுகம் தொலைக்காட்சியில் தினமும் காலை 6:50 மணிக்கும் மாலை 6:50 மணிக்கு மறுஒளிபரப்பாகும் .

இதனை பிரபல எழுத்தாளர் மற்றும் ஆன்மீக சொற்பொழிவாளர் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி 1690 எபிசோடுகளை கடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *