தமிழகத்தில் பொறியியல், மருத்துவம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கொடுத்து முடித்துவிட்ட நிலையில் தற்போது சட்டக்கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 13ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூரில் உள்ள சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு இளநிலை சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 13ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டக்கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிற்து.

English Summary : Application will be issued from June 13th for Law studies.