rahuman
இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘புலி’ திரைப்படம் வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. விஜய் லண்டனில் இருந்து இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை திரும்பிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இந்த படத்தின் தொடக்கவிழாவுடன் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என இயக்குனர் அட்லி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், டியூன்கள் கம்போஸ் செய்வதில் மும்முரமாக உள்ளார். இவருக்கு இந்த படம் 50வது படம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி பாடல்களை கம்போஸ் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பாட ஜி.வி.பிரகாஷ்குமார் தனது நெருங்கிய உறவினரும், ஆஸ்கார் விருது பெற்றவருமான ஏ.ஆர்.ரஹ்மானை அணுகியுள்ளதாகவும், அவரிடம் இருந்து பாசிட்டிவ்வான பதில் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் விஜய்க்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை பாடவுள்ளதாக படக்குழுவினர் கூறி வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தான் இதுவரை வேறு இசையமைப்பாளர்கள் பாடியுள்ளார்களே தவிர இதுவரை ஏ.ஆர்.ரஹ்மான் வேறு இசையமைப்பாளர்களின் டியூனுக்கு இதுவரை பாடியதில்லை. ஆனால் உறவினர் ஜி.வி.பிரகாஷுக்காகவும், விஜய்க்காகவும் அவர் பாட இசைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்க்காக அவர் ‘அழகிய தமிழ் மகனே’ படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

English Summary : AR Rahman to sing the song for Vijay