priya
விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ’10 எண்றதுக்குள்ள’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படம் வரும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ல் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் ‘அரிமா நம்பி’ இயக்குனர் ஆனந்த் ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். ‘மர்ம மனிதன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் மற்றும் ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால் தற்போது ப்ரியா ஆனந்த் கால்ஷீட் தேதிகள் மர்மமனிதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ள நாட்களில் இல்லாததால், அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக பிந்து மாதவி, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

முந்தைய படத்தை போலவே ரேஸிங் மற்றும் த்ரில்லர் திரைக்கதையை உருவாக்கியுள்ள ஆனந்த் ஷங்கர், இந்த படத்தின் படபிடிப்பை ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக விக்ரம் இதுவரை நடித்திராத புதுவித கெட்டப்பிற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

 

English Summary : Vikram and Priya Anand deviated from the film.