அருள்நிதி நடித்த ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என்ற திரைப்படம் வரும் வெள்ளிக்கிமை அதாவது ஜூன் 19ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படம் மட்டுமின்றி தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை உறுதி செய்வது போல் இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் விளம்பரங்கள் இன்றைய செய்தித்தாள்களில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அருள்நிதியின் படம் ஒருவேளை ரிலீஸாகாவிட்டால் ‘வடிவேல்’ நடிப்பில் வெளிவரும் ‘எலி’ படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் எலி படத்திற்கு இன்று முதல் டிக்கெட்டுக்கள் ரிசர்வ் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்தில் அருள்நிதி, ரம்யா நம்பீசன், சிங்கம்புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ரெஜின் இசையமைத்துள்ளார். அதேபோல் குற்றம் கடிதல்’ படத்தில் ராதிகா பிரசிதா, பவல் நவகீதன், சாய் ராஜ்குமார் உள்பட பலர் நடித்துள்ளார். ஜி.பிரம்மா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஷங்கர் ரெங்கராஜன் இசை அமைத்துள்ளார். இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

English Summary : Since Arulnidhi next film “Naalu policeum nalla irundha oorum” Film release date has been postponed, Vadivelu’s film “Eali” has got more screens to release.