மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு பலவிதமான சலுகைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கை வசதிக்கு வழி செய்து கொண்டிருக்கும் நிலையில் மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை அறிந்திட பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளம் ஒன்று நேற்று தொடங்கப்பட்டது. இந்த இணையதளத்த்தை சென்னையில் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடக்கி வைத்தார்.

“சோல்ப்ரீ’ என்ற அறக்கட்டளையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தின் முகவரி “www.soulfree.org’ ஆகும். இந்த இணையதளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும் என்றும், இந்த இணையதளத்தை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி பயன்பெறுமாறும் அந்த அறக்கட்டளையின் நிறுவனர் ப்ரீத்தி தெரிவித்தார்.

English Summary: New Website introduced for Differently Abe-led Persons. In that, they will come to know all about their requirements given by governments and private sectors.