பிரபல பாலிவுட் நடிகரும், முன்னணி நடிகை கரீனா கபூரின் கணவருமான சயீப் அலிகானுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு மும்பையில் உள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றில் சயீப் அலிகான் தகராறில் ஈடுபட்டதால் அவர் மீது கிரிமினல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் ஒருவர் பத்ம விருது கமிட்டிக்கு புகார் அனுப்பினார்.

இந்த புகார் மீது கடந்த சில நாட்களாக எவ்வித பதிலும் இல்லாததால், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அவர் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளதால் தற்போது இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டுள்ளது. சயீப் அலிகான் ரெஸ்டாரெண்டில் தகராறு செய்தது குறித்த விபரங்களையும் உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்புமாறு மும்பை போலீஸார்களுக்கு உத்தரவு வந்துள்ளது.

இந்த உத்தரவின் அடிப்படையில் மும்பை போலீஸார் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் சயீப் அலிகானின் பத்மஸ்ரீ விருது விரைவில் பறிக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.