சென்னையில் நேற்று பார்வையற்றோருக்கான கார் பந்தய போட்டி நடைபெற்றது. இந்த பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மெட்ராஸ் மயிலாப்பூர் ரவுண்ட் டேபிள் 3, பெண்கள் வட்டம் 4 ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய பார்வையற்றவர்களுக்கான கார் பந்தய போட்டி கிண்டியில் உள்ள ஒலிம்பியா தகவல் தொழில் நுட்ப பூங்காவில் நேற்று காலை நடைபெற்றாது. இந்த போட்டியை நடிகர் வைபவ் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

இந்த போட்டியில் சுமார் 80க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்றன. கார் ஓட்டுநரின் அருகில் அமர்ந்திருக்கும் பார்வையற்றவர் பிரெய்லி முறையில் வடிவமைக்கப்பட்ட வரைபடத்தை தொட்டுணர்ந்து சாலையில் உள்ள வழிகள் குறித்து கார் ஓட்டுநருக்கு வழிகாட்டினார். இதைத் தொடர்ந்து அந்தக் கார்கள் சென்னையில் உள்ள முக்கியப் பகுதிகளின் வழியாக சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவு சென்று பின்னர் புறப்பட்ட இடத்தை வந்தடைந்தன.

மொத்தம் 7 பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சென்னையைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் (ஓட்டுநர்), கண்ணன் (வழிகாட்டி) ஆகியோர் வென்றனர். வெற்றி பெற்ற சிவராமகிருஷ்ணனுக்கு பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது.

English Summary: Car Race held for Blinds in Olympia Tech Park, Guindy, Chennai.