சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொங்கல் புத்தக திருவிழா ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி 24–ந்தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புத்தக திருவிழாவுக்கு பெருகி வரும் ஆதரவு காரணமாக இன்னும் சிலநாட்கள் நீடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து வேண்டுகோள் வந்தது. இதனால் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா வரும் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தக திருவிழாவில், 240 ‘ஸ்டால்’கள் இடம் பெற்றுள்ளன. வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணிரையிலும் புத்தக திருவிழா நடைபெறும். நுழைவுக் கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது.

English Summary : Chennai Book Fair time extended for 2 more days.