school-101215தமிழகத்தில் பரவலாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் தீபாவளிக்கு பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஒருசில நாட்கள் மட்டுமே இயங்கியது. இந்நிலையில் வெள்ளத்தால் பழுதான பள்ளிக் கட்டிடங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 9-ம்தேதி வரை பள்ளி-கல்லூரிகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அதாவது டிசம்பர் 13ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பள்ளி கட்டிடங்களும், பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களும் சேதம் அடைந்தது. மேலும் வகுப்புகளில், வெள்ளம் புகுந்ததால், பெஞ்ச், டெஸ்க் போன்றவை நாசமாகியுள்ளன. தற்போது இவற்றை சீரமைக்கும் பணிகளில் பள்ளி நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மாணவர்களின் பிறப்பு மற்றும் மாற்று சான்றிதழ் கட்டுகளும் நீரில் மூழ்கி, சேதம் அடைந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் சீரமைப்புப் பணிகளுக்காக, தனி குழுக்களை அமைத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இணை இயக்குனர்கள் நாகராஜ முருகன், உமா, சுகன்யா, நரேஷ், பழனிச்சாமி உள்ளிட்டோர், நேற்று பள்ளிகளை ஆய்வு செய்தனர்.

பள்ளிகளின் மேஜை, நாற்காலி, பெஞ்ச், டெஸ்க் ஊறிப்போய்,பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், ஆசிரியர்களின் வேலை மற்றும் ஊதியம் தொடர்பான ஆவணங்களும் சேதம் அடைந்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும்
வகுப்பறைகளில் நீர் புகுந்தது மட்டுமின்றி, பாம்பு, பூனை, தேள், ஆமை, எலி, தவளை, பூச்சிகளும் புகுந்துள்ளன. அவற்றின் எச்சங்களும், வகுப்பறைகளில் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சென்னையை பொருத்தவரையில் சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஜாபர்கான் பேட்டை, கிண்டி, சூளைமேடு, சி.எம்.டி.ஏ.,காலனி, சாலிகிராமம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில், தாம்பரம், வேளச்சேரி, மடிப்பாக்கம், இரும்புலியூர், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள்,
திருவள்ளூர் மாவட்டத்தில், அயனம்பாக்கம், மணலிபுதுநகர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள் 100 சதவீத இழப்புகளை சந்தித்துள்ளதாக ஆய்வில் கூறப்படுகிறது.
English summary-Chennai, Thiruvallur, and Kanchipuram districts schools and colleges will be remain closed until Sunday (Dec 13,2015) due to rehabilitation works in progress.