கார்த்திக் நடித்த ‘கொம்பன்’ திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் அவர் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கார்த்தியுடன் நாகார்ஜுனாவும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார்.

இந்நிலையில் கார்த்தி-நாகார்ஜுனா நடிக்கவுள்ள இந்த படத்தில் இருந்து விலகுவதாக ஸ்ருதிஹாசன் இமெயில் மூலம் படக்குழுவினர்களுக்கு தகவல் தெரிவித்திருந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘பிவிபி சினிமா’ ஸ்ருதிஹாசன் மீது நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

ஸ்ருதிஹாசனின் தேதிகளை பெற்ற பின்னர்தான் படப்பிடிப்பை உறுதி செய்ததாகவும், கடைசி நேரத்தில் படத்தில் இருந்து விலகுவதாக ஸ்ருதிஹாசன் அறிவித்தது ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றும் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த மனு மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி, பிவிபி தரப்பின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு, ‘ஸ்ருதி ஹாசன் புதிய படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடிப்பதற்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English Summary: Court gives stay order to Surutihasan that she cannot act any films or Advertisements temporary.