விஷால் நடித்த நான் மகான் அல்ல, சிபிராஜ் நடித்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ ஆகிய படங்களில் வில்லன் வேடமேற்று நடித்த நடிகர் பிரின்ஸ் தற்போது சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பிரின்ஸ் அளித்த பேட்டி ஒன்றில், தான் சினிமாவில் அறிமுகமான விதம் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார். நடிகர் விஷாலை முதன்முதலாக ஜிம்மில்தான் பார்த்து அறிமுகமானதாகவும், அந்த அறிமுகத்தின் அடிப்படையில் விஷால் முதல் தயாரிப்பான ‘பாண்டிய நாடு’ படத்தில் நடிக்க தனக்கு ஒரு நல்ல கேரக்டரை அவர் கொடுத்ததாகவும், ஆனால் தன்னால் அந்த கேரக்டரில் ஒரு சில காரணத்தினால் நடிக்க முடியவில்லை என்று கூறினார்.

ஆனாலும் விஷால் தன் அடுத்த படமான ‘நான் மகான் அல்ல’ படத்தில் தனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்து தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியதாகவும், அதன்பின்னர் சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை என்ற படத்திலும் ரசிகர்கள் பாராட்டும் கேரக்டர் ஒன்று தனக்கு கிடைத்ததாகவும் கூறிய பிரின்ஸ் இருவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

தற்போது மாஸ் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றும் கேரக்டரை சூர்யா தனக்கு அளித்தபோதிலும் தன்னுடைய உடல் பிட்னெஸ்ஸை பார்த்து சூர்யா பெரிதும் பாராட்டினார் என்றும் அவர் ஒரு ஆசிரியரை போல பொறுமையாக தன்னுடைய கேரக்டரை தனக்கு புரிய வைத்தார் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

English Summary : How is Jim ‘s friend Vishal villain ?