ஆண்டுக்கு இரண்டு முறை நடந்து வரும் நெட் தேர்வு வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல், கணிதம் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ‘நெட்’ தகுதித்தேர்வினை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான முதலாவது நெட் தேர்வு ஜூன் 21ஆம் தேதி சென்னை, உள்பட நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளதாக சிஎஸ்ஐஆர் அறிவித்துள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சிஎஸ்ஐஆர் இணையதளமான www.csirhrdg.res.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் உள்ள புகைப்படம் தெளிவாக இல்லாத பட்சத்தில் இரு புகைப்படங்களையும், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையையும் தேர்வு மையத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று சிஎஸ்ஐஆர் முதுநிலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

English Summary : CSIR announces that NET exams will be conducted on June 21st 2015.