சென்னை: கடந்த சில நாட்களாகவே வாகனம் எரிபொருளுக்கான விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, இன்றைய நாளுக்கான பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. சென்னையில் டீசல் விலை, நேற்று லிட்டருக்கு 15 காசு உயர்ந்தது ரூ.73.23 ஆக இருந்தது. அதேபோல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.94 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.73.38 காசுகள் என இன்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அதிக விலையாக கருதப்படுகிறது.

முன்னதாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதன் காரணமாக எரிபொருட்களின் விலையில் தொடர்ச்சியாக மாற்றம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *