காஞ்சிபுரம் நகருக்குள் சென்னையிலிருந்து இ. பாஸ் அனுமதியில்லாமல் வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பா.சாமுண்டீஸ்வரி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான 5 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் ஒரு டி.எஸ்.பி. தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதம் (ஜூன்) 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தமிழக அரசு மீண்டும் பொதுமுடக்கம் அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் நகரில் தேவையில்லாமல் வெளியில் வருவோர்கள் மற்றும் வாகனங்களில் சுற்றித் திரிவோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். காவல்துறையும், நகராட்சியும் இணைந்து காஞ்சிபுரம் நகரில் முகக்கவசம் அணியாமல் வருவோரைக் கண்டறிந்து ரூ. 100 அபராதம் விதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *