தமிழகத்தின் தெற்கு கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

‘பேய்ட்டி’ புயலால் தமிழகத்துக்கு ஒரு துளி கூட மழை கிடைக்கவில்லை என்றாலும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தம் காரணமாக இன்றும் நாளையும் கணமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், “வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்தம் காரணமாக டிசம்பர் 21 முதல் டிசம்பர் 25 வரை தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *