தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – எட்டு (வேகவைத்து, மசித்தது)

கடலை பருப்பு – ஒரு மேஜைக்கரண்டி

உளுத்தம் பருப்பு – ஒரு மேஜைக்கரண்டி

முந்திரி பருப்பு – எட்டு

மைதா மாவு – இரண்டு கப்

பச்சை மிளகாய் – ஒன்று

கரிவேபில்லை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

கடுகு – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

நல்லெண்ணெய் – இரண்டு மேஜைக்கரண்டி

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், கரிவேபில்லை, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.

அதில், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கிளறி இறக்கவும்.

ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்றாக போளி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

பிறகு, ஒரு உருண்டை எடுத்து வாழை இலையில் தட்டி நடுவில் பூரணம் வைத்து மூடி மறுபடியும் மெல்லியதாக தட்டி, தவாவில் போட்டு சுற்றி நெய் ஊற்றி போளி சுட்டு எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *