ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்யும் மத்திய பணியாளர் ஆணையம் யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் தேர்வு தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு கடந்த 23ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் பணி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு வரும் ஜூன் 19ஆம் தேதி கடைசி தினம் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பங்களை www.upsconline.nic.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.ஆன்லைன் தவிர வேறு வழிகளில் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க அனுமதி கிடையாது. இந்த தேர்வுக்கு ஏறத்தாழ 13 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு மின்னணு நுழைவுச்சீட்டு, தேர்வுக்கு 3 வாரங்களுக்கு முன் வழங்கப்படும். அதை யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். அஞ்சல் வழியாக அனுப்பப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Stage 1 exam for IAS, IPS will be conducted on August 23rd.