கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த 8வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நாளை மறுநாள் 8ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவின் 12 மைதானங்களில் நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவுக்கு டிக்கெட் எடுக்க தற்போதே ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. வரும் 9ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி அணியையும், 11ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியையும் எதிர்கொள்ள இருக்கின்றது.

சென்னையில் நடைபெறவுள்ள இந்த இரண்டு லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது. இந்த டிக்கெட்டுகளை வாங்க கிரிக்கெட் ரசிகர்கள் அதிகாலை முதற்கொண்டே ஸ்டேடியம் முன்பு திரண்டு நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுகளை வாங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றது.

ரூ.750 மதிப்பிலான குறைந்தபட்ச டிக்கெட்டுக்களை வாங்கவே ரசிகர்கள் பெரும் அளவில் குவிந்து இருந்ததாக கூறப்படுகிறது. இது தவிர ரூ.1,500, ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.6 ஆயிரம் விலையிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக பாக்ஸ் டிக்கெட் விலை ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.