ருத்ராவுக்கு வரும் சிக்கல்! – இந்துமதி காரணமா..?

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் “கண்ணெதிரே தோன்றினாள்”.

சக்தியாக சுவேதாவும், ருத்ராவாக மாளவிகா அவினாஷூம் நடிக்கும் இந்த தொடருக்கு குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது தொடரின் விறுவிவிறுப்பு மேலும் கூடியிருக்கிறது.

அலுவலகத்தில் மயங்கி விழும் ருத்ராவை, சக்தி மருத்துவமனையில் சேர்க்கிறார். பரிசோதனையில், ருத்ராவுக்கு விஷயம் கொடுத்தது தெரிய வர, பழி இந்துமதி பக்கம் திரும்புகிறது. இதற்கிடையே, ருத்ராவின் நிறுவனத்துக்கு சிக்கல் வர, அதற்கும் இந்துமதி தான் காரணமாக இருப்பாரா என்கிற சந்தேகத்தோடும், ருத்ராவை கொல்ல முயன்றது யார்? ருத்ரா நிறுவனத்துக்கு சிக்கல் கொடுப்பது யார்? என்கிற சில மர்மங்களோடும் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *