ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதலில் டிரப் (Trap) பிரிவில் இந்தியாவின் இளம் வீரரான லக்சாய் ஷியோரன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் சீன தைபே வீரருக்கும், இவருக்கும் இடையில் முதல் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் சீன தைபே வீரர் யங் குன்பி 48 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இந்திய வீரர் லக்சாய் 43 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். கொரியா வீரர் 30 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.

லக்சாய் பதக்கம் மூலம் இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் வென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *