வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி வருகிறது. இதனால் சென்னை உள்பட புதுச்சேரி மற்றும் ஆந்திர கடற்கரை பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாகி புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறும் என்று தெரிவித்து உள்ளது.

மேலும், இந்த புயலானது வரும் 8ஆம் தேதி தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியை நோக்கி நெருங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *