captian
சென்னை மெட்ரோ ரயிலில் இன்று ஒரே நாளில் இரு தலைவர்கள் பயணம் செய்தனர். நேற்று முன் தினம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம், பயணிகளின் பெரும் ஆதரவை பெற்றுள்ள நிலையில், இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.

இன்று காலை 9.30 மணிக்கு கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஆலந்தூர் வரை மு.க.ஸ்டாலின் பயணிகளோடு பயணியாக பயணம் செய்தார். அவர் பயணம் செய்த ரயிலில் அதிக அளவில் கூட்டம் இருந்ததால் மு.க.ஸ்டாலின் பெட்டியில் நின்று கொண்டே சிறிது நேரம் பயணம் செய்தார். பயணிகளுடன் பேசிக்கொண்டே பயணம் செய்த அவர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் ஆலந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வரை பயணம் செய்தார். மைத்துனர் எல்.கே.சுதீஷ் மற்றும் கட்சி தொண்டர்களுடன் பயணம் செய்த அவர், மெட்ரோ ரயில் திட்டம் நல்ல திட்டம் என்றும், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள திட்டம் என்றும் கூறினார்.

ஒரே நாளில் இரண்டு தலைவர்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததால் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

English Summary : MK Stalin , who traveled by train to Chennai Metro – Vijayakanth.