நமது நாட்டில் பெண் குழந்தைகளை வாழ விடுங்கள் என்று நாட்டில் வாழும் அனைவரிடமும் கேட்டுகொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் 100 மாவட்டகளில் ஆண்களுக்கு நிகரான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆகவே பெண் குழந்தைகளை காப்போம்,கற்க வைப்போம் என்று உருக்கமாக தெரிவித்தார்.

நேற்று பிரதமர் மோடி அவர்கள், அரியானா மாநிலத்தில் “பெண் குழந்தைகளை காப்போம்,கற்க வைப்போம்” என்ற புதிய திட்டத்தை துவக்கி வைத்தார்.