சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இன்று (ஜூன் 18) முதல் ஜூன் 30 வரை இறைச்சிக் கடைகள் திறக்க கூடாது என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு: சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட உள்ள பொதுமுடக்கம் காரணமாக மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மீன், ஆடு, கோழி மற்றும் மாடு ஆகிய இறைச்சிக் கூடங்கள் ஜூன் 30 வரை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *