பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள் தயாராகி வருகின்றன. ஜூலை முதல் வாரத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தகவல் கேட்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதத் தயாராக உள்ள மாணவர்கள் குறித்த பட்டியல் பெறப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும்.” என்று கூறினார். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் அதைத் தொடர்ந்து அறிவிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

“கொரோனா பாதிப்பு காரணமாக புத்தகங்கள் அச்சடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் ” என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *