தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் எஸ்.ஐ தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என குழுமத்தின் தலைவர் நேற்று அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. பொது விண்ணப்பதாரர்களுக்கு வரும் 23ஆம் தேதியும், காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு 24ஆம் தேதியும் தேர்வுகள் நடைபெற உள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறவுள்ள இந்த தேர்வுக்கு அழைப்புக் கடிதம் ஏற்கெனவே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அழைப்பு கடிதங்களை www.tnusrbexams.net என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் தேர்வு குறித்த விவரங்கள் விண்ணப்பதாரர்களின் செல்போன் மற்றும் மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து தேர்வில் பங்கேற்கலாம்.

இவ்வாறு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

English Summary: Offer Letters for SI Posts in Internet, Tamilnadu Police Recruitment Head.