சபரிமலை கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் மாதம் 15-ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு நவம்பர் 16 – இல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. https://sabarimalaonline.org/#/login என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *