தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தண்டவாள பராமரிப்பு, புதுப்பிப்பு பணி காரணமாக மின்சார ரயில்களின் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இன்று (20-ம் தேதி) திருத்தணியில் இருந்து அரக்கோணத்துக்கு இரவு 9, 11 மணிக்கு செல்லும் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. வேளச்சேரியில் இருந்து திருத்தணிக்கு மாலை 5.35 மணிக்கு புறப்படும் ரயில் அரக்கோணம் வரை இயக்கப்படும்.

சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்குஇரவு 7 மணிக்கு புறப்பட்டு செல்லும் ரயில் அரக்கோணம் வரையிலும், திருத்தணியில் இருந்து சென்ட்ரலுக்கு இரவு 9.40 மணிக்கு இயக்கப்பட வேண்டிய ரயில் அரக்கோணத்தில் இருந்தும் இயக்கப்படும். சென்ட்ரல் – திருத்தணிக்கு இரவு 8.15 மணி ரயில் அரக்கோணம் வரை இயக்கப்படும்.

நாளை (21-ம் தேதி) சென்ட்ரலில் இருந்து சூளூர்பேட்டைக்கு இரவு 7.05 மணிக்கு செல்லும் மின்சார ரயிலும், சூளூர்பேட்டையில் இருந்து சென்ட்ரலுக்கு இரவு 9.40 மணிக்கு செல்லும் மின்சார ரயிலும், சூளூர் பேட்டையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 11 மணிக்கு செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப் படுகின்றன. சென்ட்ரலில் இருந்து சூளூர்பேட்டைக்கு இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு செல்லும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டியில் இருந்து இயக்கப்படும்.

நாளை மறுநாள் (22-ம் தேதி) சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி (நள்ளிரவு 12.15), கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் (அதிகாலை 2.45) ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *