ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக அறிக்கையை 17 மாத கால விசாரணைக்கு பிறகு முகுல் முட்கல் கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்தது. 130 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள், டி.எஸ்.தாகூர், கலிபுல்லா ஆகியோர் தீர்ப்பளித்தனர். இதில், குருநாத் மெய்யப்பனும், ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ்குந்த்ராவும் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என்றும், ஐபில் சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.