நாடகம் நடத்தும் நடிகர்கள் அனைவரும் பலமுறை ரிகர்சல் பார்த்துவிட்டுத்தான் பின்னர் மேடையேறுவாரகள். ஆனால் சினிமாவில் அப்படியில்லை. ஒரு டேக் சரியாக வரவில்லை என்றால் மீண்டும் அடுத்த டேக் எடுத்துவிடுவார்கள். ஆனால் இதனால் காலநேரம் வீணாகிறது என்றும், சினிமாவிலும் ரிகர்சல் தேவை என்றும் முதன்முறையாக கொண்டு வந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன்.

மன்மதன் அம்பு, உத்தம வில்லன் ஆகிய படங்களுக்கு படக்குழுவினர் அனைவரும் ரிகர்சல் பார்த்துவிட்டு அதன்பின்னர் படப்பிடிப்பிற்கு சென்றனர். இந்நிலையில் கமல்ஹாசனின் கொள்கையை தற்போது ரஜினி படக்குழுவினர்களும் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள திரைப்படத்திற்கு தற்போது ரிகர்சல் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ரிகர்சலுக்கு அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ரஜினியும் கலந்து கொண்டார். ஒரு சீனியர் நடிகர், சூப்பர் ஸ்டார் அந்தஸ்து உள்ளவர் எவ்வித இமேஜும் பார்க்காமல் ரிகர்சலுக்கு வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

English Summary : Rajini rehearsed before shooting for his next film like Kamal.