‘என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்’ என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டியை அகில இந்திய அளவிலான கடிதம் எழுதும் போட்டி கடந்த ஜூன் 15ம்தேதி அறிவிக்கப்பட்டது.

சிறந்த கடிதத்திற்கு முதல் பரிசாக 25 ஆயிரம், 2ம் பரிசாக 10 ஆயிரம், 3ம் பரிசாக 5 ஆயிரம் என்று 4 பிரிவிலும் பரிசுகள் அறிவிக்கப்பட்டது. இதில் 18 வயது வரை உள்ளவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் இன்லாண்டு லெட்டர், என்வலப்பிரிவு உட்பட 4 பிரிவின் கீழ் கடிதங்கள் அனுப்பி வைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழக மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படும்இதில் பரிசும் பெறும் சிறந்த போட்டியாளரின் கடிதம் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அஞ்சல் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்படும் கடிதத்திற்கு முதல் பரிசு 50 ஆயிரம், 2ம் பரிசு 25 ஆயிரம், 3ம் பரிசு 10 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கடிதங்கள் அனுப்ப வரும் 30ம் தேதி கடைசி நாளாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடிதம் அனுப்ப அக்டோபர் 31ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *