G.V. Prakashடார்லிங், த்ரிஷா இல்லைனா நயன்தாரா போன்ற படங்களின் ஹீரோவும் பிரபல இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நேற்று நடந்த பயங்கர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தால் சிறுகாயத்துடன் உயிர் தப்பி உள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து வரும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் முக்கிய காட்சிகள் படப்பிடிப்பு பாண்டிச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் காரில் செல்ல வில்லன்களை துரத்துவது போன்ற காட்சி ஒன்று திண்டிவனம் அருகே நேற்று படமாக்கப்பட்டது. அப்போது கண்டெய்னர் லாரி ஒன்றின் மீது ஜி.வி.பிரகாஷ் சென்ற கார் நிலை தடுமாறி மோதி, சாலைகளுக்கு இடையே இருக்கும் தடுப்புச் சுவர் மீது மோதியது. இதில் ஆர்.ஜே.பாலாஜிக்கு மூக்கிலும், ஜி.வி.பிரகாஷிற்கு முகம் மற்றும் தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டது. இந்த விபத்தைத் அடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.

ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் பெரியளவிற்கு பாதிப்பு இல்லை என்று கூறியதால் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பினார்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக அவீகா கோர் மற்றும் நிக்கி கல்ராணி நடித்து வருகிறார்கள். தம்பி ராமையா, பிரம்மானந்தம், ஆர்.ஜே.பாலாஜி. ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடன் முக்கிய பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். சென்னை, விசாகப்பட்டினம், கோவா உள்ளிட்ட பல படங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

English summary : Shooting accident. Fortunately survived G.V.Prakash