சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி ரயில் நிலையம் வரையிலான வாராந்திர சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

இது குறித்து நேற்று தெற்கு ரயில்வே வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது:

ரயில் எண் 06063 என்ற ரயில் வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 திருநெல்வேலி ரயில் நிலையத்தை சென்றடையும்.

அதேபோல் மறுமார்க்கத்தில் ரயில் எண் 06064 என்ற ரயில் ஜூலை 5 ஆம் தேதி முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.20 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

English Summery: Southern Railway announced a Special Train From Chennai Egmore To Tirunelveli.