இரண்டாம் உலகம்’ படத்திற்கு பின்னர் செல்வராகவன் இயக்கவிருக்கும் திரைப்படத்திற்கு சமீபத்தில் ‘கான்’ என்ற தலைப்பு வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சிம்பு, கேதரீன் தெரசா நாயகன், நாயகியாக நடிக்கவுள்ள இந்த படத்தில் காஞ்சனா 2 நாயகி டாப்சிக்கு மிகவும் முக்கிய கேரக்டரை செல்வராகவன் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

டாப்சி இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளாராம். இவர் ஏற்கனவே பாலிவுட் திரைப்படமான ‘பேபி’யில் போலீஸாக நடித்துள்ளார். இருப்பினும் தென்னிந்திய படங்களில் டாப்சி போலீஸாக நடிப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. ஒரு முக்கியமான குற்றத்தை இன்வெஸ்டிகேட் செய்யும் அதிகாரியாக நடிக்கும் டாப்சிக்கு இந்த படத்தில் சண்டைக்காட்சிகளும் உண்டு என்று படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிம்புவும் இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான கேரக்டரை ஏற்று நடிப்பதாகவும், முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மிகவிரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கின்றார். இவர் ஏற்கனவே செல்வராகவனின் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Taapsee pannu plays a police role in Selvaragavan’s next film “Kaan”.