சென்னை: ‘தமிழகத்தின் வட மாவட்டங்களில், அடுத்த மூன்று நாட்களுக்கு, கன மழைக்கு வாய்ப்பு உள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மேற்கு பருவ மழைக்கான, மேற்கு திசை காற்று மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

கர்நாடகாவின், தெற்கு உள் மாவட்டங்கள் முதல், கன்னியாகுமரி வரையிலும், வளி மண்டலத்தில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அதனால், ‘தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு, தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், சில இடங்களில் கன மழை பெய்யலாம்’ என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *