சென்னை, கோவை, மதுரையில் இன்றுடன் முழு பொது முடக்கம் நிறைவடைகிறது. சேலத்தில் நேற்றே முடிந்து இன்று காலை கடைகள் திறக்கப்பட்டன. நான்கு நாள்களுக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இரண்டு மணி நேரத்திலேயே காய்கறிகள் விற்றுத் தீர்ந்தன.

அதேபோல் நாளை சென்னை, கோவை, மதுரையிலும் மக்கள் காலையிலேயே காய்கறி வாங்க படையெடுக்கும் சூழல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தவிர்க்க அரசு முன்கூட்டியே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை ஒரு நாள் மட்டும் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை காய்கறி, பலசரக்கு, பழங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *