திருவண்ணாமலையில், பவுர்ணமி மாத கிரிவலத்திற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர்.

வைகாசி மாத பவுர்ணமி திதி, வரும், 5 அதிகாலை, 3:22 மணி முதல், வரும், 6, அதிகாலை, 1:36 மணி வரை உள்ளது.கொரோனா ஊரடங்கால், பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது.

தற்போது, வைகாசி மாத பவுர்ணமிக்கும், கிரிவலம் செல்ல தடை விதித்து, கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *