கோட்டாட்சியர்கள் நிலையிலுள்ள 8 தமிழக அரசு அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து வழங்க மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு பணியில் இருந்த எம்.ஆசியா மரியம் என்பவருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து வழங்கியதை அடுத்து தற்போது மீண்டும் 8 பேர்களுக்கு அதே அந்தஸ்து கிடைத்துள்ளது.,

நேற்று மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சகம், வெளியிட்ட உத்தரவின் மூலம் ஐ.ஏ.எஸ் அந்தஸ்து பெற்ற அதிகாரிகளின் விபரங்கள்:

1. எஸ்.செந்தாமரை (டி.ஆர்.ஓ., தேர்தல், சென்னை நகராட்சி)
2. ஆர்.கண்ணன் (டி.ஆர்.ஓ. சென்னை மாநகராட்சி)
3. எஸ்.நடராஜன் (கூடுதல் இயக்குநர், மருத்துவம்- ஊரக சுகாதார சேவைகள், சென்னை)
4. ஏ.சிவஞானம் (இணை தலைமைத் தேர்தல் அதிகாரி-தேர்தல் விழிப்புணர்வு)
5. எல்.நிர்மல்ராஜ் (பொது மேலாளர்-டெக்ஸ்கோ)
6. எஸ்.ஏ.ராமன் (துணைச் செயலாளர், முதல்வர் அலுவலகம்)
7. ஏ.அண்ணாதுரை (மண்டல அதிகாரி, சென்னை மாநகராட்சி)
8. டி.எஸ்.ராஜசேகர்

English Summary :  TN status 8 IAS officers