TNPSC குரூப்-1 முதன்மைத் தேர்வுகள் வரும் ஜூன் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று தேர்வாணையக் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: ”தொகுதி-I (Group-I) முதன்மைத்தேர்வு நடைபெறும் நாள் 05.06.2015, 06.06.2015 மற்றும் 07.06.2015 ஆகிய மூன்று நாட்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண். 17/2013 நாள் 29.12.2013 மூலம் அறிவிப்பு செய்யப்பட்ட தொகுதி-I–2013-க்கான முதன்மைத் தேர்வு (Main Written Examination) 05.06.2015, 06.06.2015 மற்றும் 07.06.2015 ஆகிய நாட்களில் முற்பகல் மட்டும் சென்னை தேர்வு மையத்தில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் விபரம் தெரிந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் இலவச தொலைபேசி எண் 1800 425 1002 என்ற எண் மூலமாகவோ கேட்டு தெரிந்து கொள்ளலாம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : TNPSC announces Group 1 exam will be conducted for three continuous dates starts from June 5 to June 7.