சென்னை: இரண்டு தேர்வுகளுக்கான முடிவை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், சுற்றுலா துறை அலுவலர் பதவியில், ஐந்து இடங்கள்; தொழிலாளர் நலத் துறை உதவி கமிஷனர் பதவியில், 10 காலியிடங்களுக்கு, ஏற்கனவே தேர்வு நடத்தப்பட்டது. இதில், தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல், இணையதளத்தில் நேற்று வெளியானது. சுற்றுலா அலுவலருக்கு, வரும், 15ம் தேதியும், தொழிலாளர் உதவி கமிஷருக்கு, வரும், 12ம் தேதியும், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *