இந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பணிகளுக்கு ஆட்கள் தேர்ந்து எடுக்க படுவர் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பெட்டி அளித்த சி.பாலசுப்பிரமணியன் கூறுகையில்:

  • 2015-ம் ஆண்டு குரூப்-1 அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். 2014-ம் ஆண்டு 15 ஆயிரம் பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
  • 2015-ம் ஆண்டு பிப்ரவரி 2-வது வாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பதவிக்கு அறிவிப்பு வெளியாகும். இந்த பணிக்கு 4 பேர் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

எழுத்துத்தேர்வு ஏப்ரல் 26-ந்தேதி நடைபெறும்.

  • குரூப்-2 நேர்முகத்தேர்வு உள்ள 904 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு பிப்ரவரி 3-வது வாரத்தில் வெளியாகும். முதல்நிலை எழுத்துத்தேர்வு மே மாதம் 10-ந் தேதியும், மெயின்தேர்வு செப்டம்பர் 26-ந் தேதியும் நடைபெறும்.
  • குரூப் 3 நேர்முகத்தேர்வு கொண்ட 25 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு மே மாதம் 17-ந்தேதி நடத்தப்படும்.
  • உதவி சித்த மருத்துவ அதிகாரி, ஆயுர்வேதம், யுனானி ஆகிய 74 மருத்துவர்களை தேர்ந்து எடுக்க பிப்ரவரி 2-வது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும். இதற்கான தேர்வு மே மாதம் 31-ந் தேதி நடைபெறுகிறது.
  • சிறைச்சாலை அதிகாரி, உதவி சிறைச்சாலை அதிகாரி, துணை சிறைச்சாலை அதிகாரிகள் சேர்த்து மொத்தம் 5 காலிப்பணியிடங்களுக்கு தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் 4-வது வாரத்தில் வெளியாகிறது. தேர்வு ஜூன் மாதம் 14-ந்தேதி நடைபெறுகிறது.
  • புள்ளியியல் புலன்ஆய்வாளர்கள்(ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வெஸ்டிகேட்டர்கள்) காலிப்பணியிடங்கள் 268 உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் 4-வது வாரத்தில் வெளியாகும். தேர்வு ஜூன் 20-ந்தேதி நடைபெறும்.
  • 47 காலிப்பணியிடங்கள் கொண்ட குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும். முதல் நிலைத்தேர்வு ஜூலை 5-ந் தேதியும், மெயின்தேர்வு டிசம்பர் 5-ந் தேதி முதல் 7-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
  • 564 காலிப்பணியிடங்கள் கொண்ட குரூப்-2 ஏ (நேர்முகத்தேர்வு இல்லாதது) தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு ஆகஸ்டு 16-ந்தேதி நடைபெறும்.
  • வட்டார சுகாதார புள்ளியியல் நிபுணர்கள்(பிளாக் ஹெல்த் ஸ்டாட்டிஸ்ட்சியன்) காலிப்பணியிடங்கள் 36 உள்ளன. அந்த பணிக்கான தேர்வுக்கு அறிவிப்பு ஏப்ரல் மாதம் 4-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு ஜூலை மாதம் 12-ந்தேதி நடைபெறும்.
  • கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான காலிப்பணியிடங்கள் இன்னும் வந்து சேரவில்லை. தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு அக்டோபர் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது.
  • வன பயிற்சியாளர் (பாரஸ்ட் அப்ரண்டிஸ்) காலிப்பணியிடங்கள் 27 உள்ளன. அந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்வு அக்டோபர் மாதம் 31-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் 3-வது வாரத்தில் வெளியாகும்.
  • குரூப் -4 காலிப்பணியிடங்கள் எத்தனை உள்ளன என்ற விவரம் இன்னும் வந்து சேரவில்லை. ஆனால் அந்த தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்டு மாதம் முதல்வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு நவம்பர் 15-ந் தேதி நடைபெறும்.

English Summary: This year more than 10,000 people are about to get select in government jobs said by TNPSC chairman Mr.C.Balasubramaniyan.