electric trainசென்னை கடற்கறை முதல் வேளச்சேரி வரையில் கூடுதல் மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று முதல் சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே கூடுதல் மின்சார ரெயில் சேவை இன்று தொடங்கவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 9.40 மணிக்கு புறப்படும் வண்டி எண்:41135 என்ற முதல் மின்சார ரெயில் இரவு 10.25 மணிக்கு வேளச்சேரி சென்று அடையும்

அதே போல் மறுமார்க்கமாக வேளச்சேரியில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் வண்டி எண் 41136 என்ற எண் உள்ள மின்சார ரெயில் இரவு 11.15 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.

மேலும் சென்னை கடற்கரையில் இருந்து வண்டி எண் 41139 என்ற மின்சார ரெயில் இன்று இரவு 10.20 மணிக்கு புறப்படும் இரவு 11.05 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்.

மறுமார்க்கமாக, வேளச்சேரியில் இருந்து இரவு 11.10 மணிக்கு புறப்படும் வண்டி எண் 41140 என்ற மின்சார ரெயில் இரவு 11.55 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.

English Summary:Today Onwards Additional Electric Train From Chennai Beach to Velacherry.