கடந்த 2011ஆம் ஆண்டு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த ‘கோ’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த படத்தில் பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ் ஆகிய இரண்டு தேசிய விருது பெற்ற நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று இணையதளங்களில் வெளியானது.

லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு தாமரை மற்றும் நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்த படத்தை சரத் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பிரகாஷ்ராஜின் கேரக்டருக்காக இயக்குனர் சரத், கடுமையாக ஹோம் ஓர்க் செய்துள்ளதாகவும், அவருடைய ஈடுபாட்டினை தெரிந்து கொண்ட பின்னர்தான் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். இந்த படத்தில் ‘டார்லிங்’ படத்தில் நடித்த நிகில் கல்ராணி நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

English Summary: Two National Award Winners in one film “Ko-2”.