விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘விஜய் 59’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை எம்.ஜி.எம் தீம் பார்க்கில் விஜய்-சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 40% முடிந்துவிட்டதாகவும், விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் கோவா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கோவா படப்பிடிப்பை அடுத்து சீனாவிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் இந்த படத்தில் போலீஸாக நடித்து வருவதால் அதற்கேற்றவாறு டைட்டிலை தேர்வு செய்ய இயக்குனர் அட்லி தனது உதவியாளர்களுடன் தீவிர ஆலோசனையில் உள்ளார். தீவிர ஆலோசனைக்கு பின்னர் இந்த படத்திற்கு ‘மூன்று முகம்’ என்ற டைட்டில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விஜய் இந்த படத்தில் போலீஸ் உள்பட மூன்றுவிதமான கெட்டப்பில் நடிப்பதால் இந்த டைட்டில் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்த டைட்டில் தற்போது சத்யா மூவீஸ் நிறுவனத்திடம் உள்ளது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் நடித்த படத்தின் டைட்டில் என்பதால், ரஜினியின் மூலம் இந்த டைட்டிலின் உரிமையை பெற கலைப்புலி எஸ்.தாணு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரிக்கும் கலைப்புலி எஸ்.தாணுதான், ரஜினியின் கபாலி” படத்தையும் தயாரிப்பதால், ‘மூன்று முகம்’ டைட்டிலை பெறுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்றே படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர். விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், மகேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.

English Summary : Vijay 59 is now named as “Moondru Mugam”.