ஆர்யா, அனுஷ்கா நடித்த ‘இரண்டாம் உலகம்’ படத்தின் தோல்விக்கு பின்னர் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த செல்வராகவன், தனது மனைவி இயக்கி வரும் ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தின் மேற்பார்வை பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் ஒரு படத்தை இயக்க அவர் முடிவு செய்துள்ளார்.

சிம்பு மற்றும் த்ரிஷா முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே 6ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக செல்வராகவன் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு, த்ரிஷா, டாப்சி ஜெகபதிபாபு உள்பட பலர் முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய அரவிந்த் ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன், 2ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணைத் தாண்டி வருவாயோ’ படத்திற்கு பின்னர் மீண்டும் சிம்பு-த்ரிஷா ஜோடி சேர்வதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மீண்டும் இந்த வெற்றி ஜோடியை திரையில் பார்க்க ஆவலாக இருப்பதாகவும் சிம்பு ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

English Summary : Simbu and Trisha signed for another film after VTV directed by Selvaragavan.