taapsee-6 தீராத விளையாட்டு பிள்ளை, சமரன், நான் சிகப்பு மனிதன் போன்ற விறுவிறுப்பான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ‘திரு’ தற்போது ஜெய் மற்றும் டாப்சி நடித்து வரும் திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் தமிழ்ச்செல்வி என்ற கேரக்டரில் டாப்சி நடிக்கவுள்ளதாகவும், இந்த கேரக்டர் படத்தின் மிகபெரிய பலம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். முதலில் இந்த கேரக்டரில் த்ரிஷா நடிக்கவிருந்த நிலையில் திடீரென அவர் ஒருசில கருத்துவேறுபாடு காரணமாக படத்தில் இருந்து விலகியதை அடுத்து டாப்சி இந்த கேரக்டரில் நடிக்கின்றார்.

டாப்சி நடிப்பில் சமீபத்தில் வெளியான காஞ்சனா 2, ‘வை ராஜா வை’ ஆகிய இரண்டுமே சூப்பர் ஹிட் ஆகியதை அடுத்து இந்த படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.

டாப்சி இந்த படத்தில் கும்பகோணத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணாக நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.