ரஜினி, சரத்குமார், அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை நயன்தாரா நேற்று கொச்சி சர்ச் ஒன்றில் இயக்குனர் விக்னேஷ் சிவா என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தற்போது படுவேகமாக ஒரு செய்தி பரவி வருகின்றது. இதற்கு தற்போது நயன்தாரா விளக்கமளித்து உள்ளார்.

திருமணம் என்பது எவ்வளவு புனிதமான விஷயம் என்பதை நான் புரியாதவர் அல்ல. எனது கவனம் தற்போது சினிமாவில் மட்டும்தான் உள்ளது. எனக்கு திருமணம் நடந்ததாக வெளிவந்த தகவலில் சிறிதும் உண்மையில்லை. எனவே ஊடகங்கள் இந்த விஷயத்தில் ஓவர் டைம் வேலை செய்வதை விட்டுவிட்டு உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்’ என்று கூறியுள்ளார்.

இதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நயன்தாராவுடன் திருமணம் என்ற தகவல் நிச்சயமாக பொய்யானது. இந்த வதந்தியால் என்னுடைய திரைப்பட பணியும், பர்சனலாக என் மனதும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது ஊடகங்கள் தயவுசெய்து இந்த விசயத்தை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவா தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தனுஷ் தயாரித்து வருகிறார்.

English Summary: Nayanthara said she would be single. Her Marriage is not done yet. Stop Yelling about my marriage.