தமிழக அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் நடத்தப்படும் குரூப் 2 தேர்வு வரும் ஜுலை 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. 1241 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் இந்த தேர்வுக்கு விண்ணப்பதாரர்களுக்கு உதவி செய்யும் வகையில் இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த முடிவு உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. இதன்படி, ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளன.

இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள், குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான சான்று, வேலைவாய்ப்பு அட்டை ஆகியவற்றுடன் சென்னை சாந்தோமிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தையும், மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்கள் கிண்டி சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் மே 29ஆம் தேதிக்குள் நேரில் தொடர்பு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

English Summary: Free Coaching Classes for Group 2 Applied Candidates, Chennai District Collector A.Sundravalli.